ஜெயலலிதாவின் மகள் என்ற வதந்தியால் மனவேதனையடைந்த திவ்யா குடும்பம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை பெருத்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் மறைந்த ஜெயலலிதாவின் உண்மை மகள் இவர்தான் என திவ்யா ராமநாதன் வீரராகவன் என்ற பெண்ணின் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போலவே தோற்றமளிக்கும் அந்த பெண் குறித்த புகைப்படங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரும் பலமுறை மறுப்பு தெரிவித்து வெளியிட்ட தகவல்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.

இதுகுறித்து பிரபல பின்னணி பாடகியும், திவ்யா ராமநாதன் வீரராகவன் உறவினருமான சின்மயி ஸ்ரீபதா தற்போது சமூகவலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இப்புகைப்படத்தில் உள்ள திவ்யா ராமநாதன் வீரராகவன் என்னுடைய உறவினர். இவரை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரைக் குறித்து சில காலமாக சமூக பக்கத்தில் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஜெயலலிதாவிற்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை எனது உறவினர்களும், நண்பர்களும் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.



இதைத்தொடர்ந்து இசைக் கலைஞர் வித்வான் வி.பாலாஜி வதந்திகுறித்து சமூக வளைதளத்தில் சின்மயி ஸ்ரீபதா பதிவுசெய்த கருத்தை பகிர்ந்தார். மேலும் அந்த பதிவில், இத்துடன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என நம்புவதாகவும், இதனால் அந்த பெண்ணின் குடும்பம் ஊடகங்களின் பாரவையில் இருந்து தப்பும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...