மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் திருநங்கைகள் மெளன அஞ்சலி ஊர்வலம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருக்காக கண்ணீர் அஞ்சலி, மெளன அஞ்சலி ஊர்வலம், மொட்டை அடித்தல் உள்ளிட்டவைகள் அதிமுக கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் செலுத்தி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகள் சார்பாக ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட அவர்கள் கவுண்டம்பாளையத்திலிருந்து டி.வி.எஸ் நகர் வரை மெளன ஊர்வலமாக சென்றனர். 



இதுகுறித்து கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க செயலாளர் பூங்குழலி கூறும்போது, கோவை மாவட்டத்தில் 480-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பசுமை வீடுகள், ஆதார் கார்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், ரேசன் கார்டுகள் குடும்பங்களுக்கு தான் வழங்கப்படும். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இல்லை. ஆனால், ஜெயலலிதா ரேசன் கார்டுகள் 1 வாரத்தில் எங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். 



எங்களுக்கு வேலைகளும் தற்போது கிடைக்கிறது. எங்களாலும் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடியும் என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில்  தான். அவர்கள் இறந்த செய்தியை கேட்டு எங்களால் 2 நாட்களாக தூங்க முடியவில்லை, உணவு உண்ணவில்லை , இனிமேல் இவரை போல தலைவர் வருவாரா என்பது சந்தேகமே என்று கூறினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...