மாருதி சுசூகி ஓலாவுடன் இணைந்து ஓட்டுநர் பயிற்சி அளிக்க புதிய திட்டம் ஒப்பந்தம்



மாருதி சுசூகி  இந்திய லிமிடெட் நிறுவனமும், ஓலா கால் டாக்சி நிறுவனமும் இணைந்து ஓட்டுநர்களுக்கான பயிற்சி அளிக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாருதி ஓலா பயிற்சி என்னும் இந்த திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன் மூதற்கட்டமாக பெங்களூர், சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மும்பை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்த உள்ளது.

இதுகுறித்து, மாருதி சுசூகியின் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது:-

மாருதி நிறுவனமானது சிறந்த முறையில் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துகிறது. வாகனம் ஓட்டுவதில் உள்ள குறைபாடுகளால்தான் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்பயிற்சியில் பங்குபெறுவோருக்கு வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி சீராக செயல்படுவது உள்ளிட்டவையும் கற்றுத்தரப்பட உள்ளது.

இப்பயிற்சி 370 மாருதி ஓட்டுநர்கள் பள்ளி மூலம் வழங்கப்பட உள்ளது. நாங்கள் 40 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு 3 வருடத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

ஓலாவின் முதன்மை செயல் அலுவலர் பிரனை ஜிவ்ராஜ்கா கூறியதாவது:-

மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிப்பதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. அதனால், இத்துறையில் வளரும் சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது. நாங்கள் மாருதி நிறுவனத்துடன் இணைந்து ஓட்டுநர்களை உருவாக்கப்போகிறோம்'' என்றார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...