3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இரவு உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

ஜெயலலிதா மறைவையொட்டி டிசம்பர் 6-ஆம் தேதி ஒரு நாள் பொதுவிடுமுறை விடப்பட்டது. 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 



இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பொருட்களில் அனைத்திலுமே ஜெயலலிதாவின் உருவப்படம் உள்ளது. நோட்டு புத்தகங்கள், பள்ளி பை, லேப்டாப், சைக்கிள் என எண்ணற்ற பொருட்களை மாணவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் மனதைக் கவர்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்று அஞ்சலி நிகழ்ச்சியில் பல மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...