44 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்கிறதா ஈஷா?



கோவையை அடுத்த முட்டத்துவயல் என்ற  பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமாக 44.30 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடம் நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு கடந்த 1992ம் ஆண்டு பழங்குடி இன மக்கள் 46 பேருக்கு ஒப்படைக்கபட்டது. ஆனால், போலியான ஆவணங்களை தயாரித்த ஈஷா யோக மையம் அந்த நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஈஷா அபகரித்ததாக கூறப்படும் 44.30 ஏக்கர் நிலத்தை மீட்டு தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை 15 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



இந்த நிலையில், இன்று ஈஷா நிர்வாகத்தினர் இன்று 4 டிரேக்டர்களை கொண்டு அந்த நிலத்தை உழவு செய்தனர்.பேச்சுவார்த்தையில் இருக்கும் இடத்தை ஈஷா நிர்வாகம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வது கண்டனுத்துக்கு உரியது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வுகான வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...