கேஎம்சிஎச் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வழக்கறிஞர் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்


கோவை மாவட்டம், கணபதியைச் சேர்ந்தவர் ஆர்.மில்டன் ஆனந்த் (44). இவருக்கு எம்.ஷீபா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில், மில்டன் ஆனந்த் கடந்த நவம்பர் 27ம் தேதியன்று இரத்த அழுத்தம் காரணமாக திடீரென சுயநினைவின்றி விழுந்தார். உடனடியாக அரவது உறவினர்கள் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின், டிசம்பர் 1ம் தேதியன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக கேஎம்சிஎச் சிறப்பு மருத்துவர்களும், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மில்டன் ஆனந்தின் குடும்பத்தினர் முன்வந்தனர். அதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளான கல்லீரல், கண்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது.

கல்லீரல் கேஎம்சிஎச் மருத்தவமனையில் உள்ள நோயாளிக்கு பொறுத்தப்பட்டது. தோல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள இரு வேறு தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, கேஎம்சிஎச் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி கூறியதாவது:- 

தற்போது மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இவர்கள் போன்று பலரும் தாமாக முன்வந்து உடலுறுப்புகளை தானமளித்தால் பலருக்கும் மறுவாழ்வு கிடைக்கும்'' என்றார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...