பணமில்லா வர்த்தகம் குறித்து தியாகி குமரன் மார்கெட்டில் வானதி ஸ்ரீனிவாசன் பிரச்சாரம்.


சிறிய காய்கறி கடைகளில் பணமில்லா வர்த்தகம்  செய்வது குறித்து பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் வங்கி அதிகாரிகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பணமில்லா வர்த்தகம் மேற்கொள்ளும் முறையை பின்பற்றும் பொருட்டு பா.ஜ.க சார்பாக கோவை தியாகி குமரன் மார்கெட்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, காய்கறி வியாபாரிகளிடம் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள கியூ ஆர் கோடு  பயன்படுத்தி விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளித்தனர். 

இதன் மூலம் வியாபாரிகளின் இந்தியன் வங்கி கணக்கில் இருந்து உருவாக்கிய கியூ. ஆர் கோட்டில், வாடிக்கையாளர்கள் தங்கள் இந்தியன் வங்கி ஆப் மூலம் ஸ்கேன் செய்து , பணமில்லா பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திராத வாடிக்கையாளர்களும் இச்சேவையை பயன்படும் வகையில் ஆப் உருவாக்கும் முறையில் இந்தியன் வங்கி ஈடுபட்டு வருவதாகவும் , வங்கியில் கணக்கு இல்லா வியாபாரிகளுக்கு வங்கி கணக்கு துவங்க பா.ஜ.க நிர்வாகிகள் சார்பாக உதவிகள் மேற்கொள்ளப்படும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...