கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  தலைமையில் இன்று (29.11.2016) துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில்:-  “கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று (29.11.2016) கோவை மாநகராட்சியும் மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் இணைந்து மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது. 



கோவை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ முகாம் துவக்கி வைத்ததை துப்புரவு பணியாளர்களின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேசி இந்த மருத்துவ முகாமிற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.

இந்த மருத்துவ முகாமை கோவையிலுள்ள முன்னனி தனியார் மருத்துவமனைகள் ஒன்றாக இணைந்து நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை “YI” மற்றும் “CII” மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். 

அதனை தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மண்டல வாரியாக உள்ள பள்ளிகளில் காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க துப்புரவு அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அனைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இந்த தகவலை துப்புரவு பணியாளர்கள் சங்கங்கள் மூலம் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து துப்பரவு பணியாளர்களும் கலந்து கொண்டு பயன்பெற்ற இம்மாநகராட்சி நற்பெயர் ஏற்பட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி  அலுவலர்  டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், அனைத்து உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், முன்னனி மருத்துவமனைகளான  பி.எஸ்.ஜி, கே.எம்.சி.எச், கே.ஜி, கங்கா, அரவிந்த் கண்மருத்துவமனை, சங்கரா கண்மருத்துவமனை, ராமகிருஷ்ணா, தைரோ கேர், ஜி.கே.என்.எம்,  ஜெம் மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்களான  ரத்னா ஏஜென்சீஸ், ஐடிசி  தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...