ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள வணிக முடக்கத்தை மத்திய அரசு தீர்க்கக் கோரி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால், தற்போது தமிழகத்தில் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.





அதன்படி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை மண்டலத் தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன் முன்னிலையில், நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே  வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டினை அதிகளவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.

வணிகர்கள் மற்றம் தொழில் முனைவோருக்கு நடப்புக் கணக்கில் வாரம் ஒருமுறை ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பை உயர்த்தி 2 லட்சம் ரூபாய் வரையிலும் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சிறிய, நடுத்தர வணிகர்கள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் இருப்பில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தேவைக்கேற்ப வங்கிகள் மூலமும், ஏடிஎம் இயந்திரம் மூலமும் பணம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...