சொத்துவரி செலுத்தாத தொழிற்சாலையின் முன்பு குப்பைத்தொட்டி வைத்து மாநகராட்சி நடவடிக்கை

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சி ராஜராஜேஸ்வரி நகரில் வசிக்கும் ராஜாராம் என்பவர் சொத்துவரி செலுத்தாதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மண்டலம் வார்டு எண் 76, ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வரும் ராஜாராம், என்பவர் வரிவிதிப்பு எண் - 76136004, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.15 ஆயிரத்து 980 மற்றும் வரிவிதிப்பு எண் - 76136005, 2016- 17-ம் ஆண்டு சொத்து வரி நிலுவை ரூ.9 ஆயிரத்து 196 என மொத்தம் 25 ஆயிரத்து 176 ரூபாய் சொத்துவரி நிலுவைத் தொகையினை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவரது தொழிற்சாலையின் முன்பு குப்பைத் தொட்டி வைக்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவரது தொழிற்சாலையின் முன்புறம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...