கோவையில் சேவல் சண்டை நடத்திய மூவர் கைது

கோவை ஆனைமலை யை அடுத்த களத்துப்புதூர் ரயிவே கேட் அருகே உள்ள மைதானம் ஒன்றில் சேவல் சண்டை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து , உதவி ஆய்வாளர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அப்போது அங்கு  மூவர் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் வருவதை கண்ட அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஜோதீஷ்குமார் (33), முத்துசாமி(30) மற்றும் ஆனைமலையை சேர்ந்த  துரையப்பன் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் , சண்டைக்கு பயன்படுத்திய 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...