கோவை மதுக்கரையில் ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி


கேரளாவிற்கு உட்பட்ட பாலக்காடு வாளையாறு வனப்பகுதியிலும் இதையொட்டியுள்ள கோவை மாவட்டத்தின் மதுக்கரை வனப்பகுதியிலும் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழகம் - கேரளம் இடையிலான ரயில்பாதையே, யானைகள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயிலில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7.05 மணியளவில் பாலக்காட்டிலிருந்து வாளையாறு, மதுக்கரை வழியாக கோவை நோக்கி பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது வாளையாறு வனப்பகுதியில் உள்ள வட்டக்காடு என்ற இடத்தில் யானைகள் கூட்டம் ரயில் பாதையை கடந்து செல்ல முயன்றது. இதனிடையே, ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததால், கடைசியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று எதிர்பாராத வகையில் ரயிலில் சிக்கியது. 



ரயிலின் என்ஜின் மோதியதில் பலத்த காயமடைந்த யானை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை உயிரிழந்தது குறித்து ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், கேரள வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். விபத்து நடைபெற்ற இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அடக்கம் செய்யப்படும் என வனத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

யானைகள் இறப்பைத் தடுக்க மதுக்கரை - வாளையாறு வனப்பகுதியில் மணிக்கு 30 கி.மீ வேகத்துக்கும் குறைவாகவே ரயிலை இயக்க வேண்டுமென தமிழக, கேரள வனத்துறையினர் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடன் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது அந்த வேகக் கட்டுப்பாடு மீறப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மதுக்கரை - வாளையாறு இடையேயான வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களில் இதுவரை 4 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...