500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் கோரி த.மா.கா-வினர் ஆர்ப்பாட்டம்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த ரூபாய்  நோட்டுக்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முன்பு சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் வங்கிகளில் போதுமான பணம் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனால், அன்றாடம் பொதுமக்கள் தங்களது பணியையும் விட்டுவிட்டு வங்கியிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும், நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெருத்த சிரமங்கள் நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், பணத்தை மாற்ற தவிக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...