முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என அப்போலோ குழும தலைவர் தகவல்

பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினரும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டனர். 

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்தார். 90 சதவிகித நேரத்தில் முதலமைச்சர் சுயமாக சுவாசிப்பதாகவும், எப்போது வீடு திரும்புவது என்பதையும் அவரே முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.

Newsletter

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும...