காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை


கோவையில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் சுபாஷ் (19). இவர் கோவையை அடுத்த கணியூரில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுபாஷ், சக ஊழியர்கள் நான்கு பேருடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த சக ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட சுபாஷ் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்றவர்கள் வீடுதிரும்பிய போது, சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சுபாஷ் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில், காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சுபாஷ் எழுதியுள்ளார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...