500, 1000 ரூபாய் தடையால் தங்க நகை தயாரிப்புத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் மனு

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் தடை அறிவிப்பால் தங்க நகை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் பல ஆயிரம் குடும்பத்தினர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அகில இந்தியா அளவில் தங்க நகை தயாரிப்பில் கோவை மாவட்டம் மூன்றாம் இடம் என்பது உலகறிந்த உண்மை. இத்தொழிலை நம்பி சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அதிர்ச்சி தகவல் வழங்கியது. இதனால், கடந்த 15 நாட்களாக தங்க நகை வியாபாரிகள் வழங்கும் ஆர்டர் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தயார்நிலையில் உள்ள புதிய தங்க நகைகள் விற்பனையும் முற்றிலும் பாதிக்கப்பட்டு விற்பனை செய்யமுடியாமல் உள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையினால் இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 55 ஆயிரம் குடும்பத்தினர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால்,  தொழில் சமுதாயத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு மாவட்ட அரசின் மூலம் விரைவில் மக்கள் வங்கியில் செலுத்திய பணத்தை புழக்கத்திற்கு வழங்க வேண்டி அழுத்தம் தர வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...