"உங்கள் காவல் துறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்"- குழந்தைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி


காவல்துறையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநகர காவல் நிலையங்களில் வாரந்தோறும் 'நோ  யுவர் போலீஸ்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு  காவல் துறை குறித்து தெரிந்துகொள்வர்.

அதன்படி, கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தனர். அங்கு இருக்கும் அனைத்து துறைகளுக்கும் சென்று போலீசாரின் அன்றாட பணிகளை தெரிந்து கொண்டனர்.  இதையடுத்து, துணை கமிஷனர் (போக்குவரத்து) சரவணன் மாணவர்களுடன் உரையாடினார்.  



அப்போது அவர், சமூகத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வரும் மனிதர்கள் அனைவரும் பள்ளி அளவில் தேசிய மாணவர்படை, சாரணர் படை ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்றார். மேலும், மாணவர்கள் அந்த இயக்கங்களில் சேர்ந்து சமூக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர், காவல் துறையில் பணியாற்ற மாணவர்கள் துணை கமிஷனரிடம் ஆர்வம் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...