மாநகராட்சி ஆணையர் உத்தரவால் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி வரி செலுத்தாத 452 குடிநீர் இணைப்புகள் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 23ம் தேதி வரை துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க், தபால் நிலையம், பாலகம், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24ம் தேதி நள்ளிரவு வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை மாநகராட்சியின் சார்பில் மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களிலேயே செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார். 

இதனிடையே, கடந்த அக். 27ம் தேதி முதல் நவ. 23ம் தேதி வரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் மாநகராட்சி வரி செலுத்தாமல் இருந்த வரிதாரர்களின் 452 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய மண்டலம் 51-ஆம் வார்டு பகுதியில் 2013 முதல் 2017 வரை மாநகாட்சி வரியாக 2 லட்சத்து 52 ஆயிரத்து 340 ரூபாய் செலுத்தாத வணிக வளாகத்தின் முன்பு மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



அக்கடையின் உரிமையாளர் உரிய வரிப்பணத்தினை செலுத்தியபின் அந்த குப்பைத் தொட்டிகள் அங்கிருந்து அகற்றப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...