கோவையில் திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி ஆர்ப்பாட்டம்!

கோவையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பினால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டதுடன், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் அலைந்து திரியவேண்டி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக தி.மு.க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. கோவையில் நஞ்சப்பா சாலையில் துவங்கி கிராஸ்கட் வீதி வரை திமுகவினர் திரண்டு நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநகர் முழுதும் இருந்து திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேட்டியளித்த பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் 500 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் அதிகளவு புழக்கதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், 1000 ரூபாய் நோட்டின் மாதிரி ஒன்றை பாடையில் கட்டி எடுத்து வந்து சங்கு ஊதியும், மேளம் முழங்கவும் ஒப்பாரி வைத்தனர். இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...