500 ரூபா நோட்டு சவ ஊர்வலம் மார்க்சிஸ்ட் கட்சி நூதன போராட்டம்


செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை தெருவில் நிறுத்திய 500 ரூபாய் நோட்டுக்கு மாலை அணிவித்து சவ ஊர்வலமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.



நாட்டு மக்களின் 80 சதவீத புழக்கத்தில் உள்ள ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அவகாசம் தராமல் ஒரே இரவில்   பிரதமர் மோடி தடாலடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என மக்களின் எதிர்ப்பை சரிகட்ட சமாளித்தார். ஆனால்  இரண்டு வார காலம் கடந்த பின்னும் சரியாகவில்லை என்பது மட்டுமல்லாமல் மேலும், மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டம் வெடித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரியநாயக்கன்பாளைய ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம் பட்டி பிரிவில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 



முன்னதாக செல்லாது என அறிவித்த ரூ 500 பழைய நோட்டுக்கு சவ மாலை அணிவித்து நூதன போராட்டத்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள ஆந்திர வங்கியின் முன்பு  மோடி அரசின்  துக்ளக் தர்பார்  நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

இந்த போராட்டத்திற்கு சண்முக கனி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன்பாளைய ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், தேவராஜ், கோகுலகிருஷ்ணன், பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

மார்க்சிஸ்ட் கட்சியின் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...