500 ரூபா நோட்டு சவ ஊர்வலம் மார்க்சிஸ்ட் கட்சி நூதன போராட்டம்


செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை தெருவில் நிறுத்திய 500 ரூபாய் நோட்டுக்கு மாலை அணிவித்து சவ ஊர்வலமாக மார்க்சிஸ்ட் கட்சியினர் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.



நாட்டு மக்களின் 80 சதவீத புழக்கத்தில் உள்ள ரூ 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அவகாசம் தராமல் ஒரே இரவில்   பிரதமர் மோடி தடாலடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என மக்களின் எதிர்ப்பை சரிகட்ட சமாளித்தார். ஆனால்  இரண்டு வார காலம் கடந்த பின்னும் சரியாகவில்லை என்பது மட்டுமல்லாமல் மேலும், மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டம் வெடித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பெரியநாயக்கன்பாளைய ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம் பட்டி பிரிவில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 



முன்னதாக செல்லாது என அறிவித்த ரூ 500 பழைய நோட்டுக்கு சவ மாலை அணிவித்து நூதன போராட்டத்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் தொப்பம்பட்டி பிரிவில் உள்ள ஆந்திர வங்கியின் முன்பு  மோடி அரசின்  துக்ளக் தர்பார்  நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

இந்த போராட்டத்திற்கு சண்முக கனி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன்பாளைய ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், தேவராஜ், கோகுலகிருஷ்ணன், பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

மார்க்சிஸ்ட் கட்சியின் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...