காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவர் மாயம்


ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல்(19). இவர் கோவையில் தங்கி வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே வகுப்பை சேர்ந்த பவதாரணி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இது பெற்றேருக்கு தெரியவர, காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்து இருவரும் தங்கள் பெற்றோருடன் செல்வதாக சம்மதம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கோகுல் மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடிவு செய்தார். கடந்த மாதம் 23ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்ட கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ராமகிருஷ்ணன் அவரை பல இடங்களில் தேடியும் கோகுல் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ராமகிருஷ்ணன் நேற்று காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார் . தொடர்ந்து வழக்கு பதிந்த போலீசார் மாயமான கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...