வால்பாறை வனத்தில் காட்டெருமை விரட்டியதால் வனக்காப்பாளர் உயிரிழந்தார்


வால்பாறை வனச்சரகம் அக்காமலை புல்லுமேடு பகுதியில் செவ்வாயன்று காட்டெருமை விரட்டியதால் நெஞ்சுவலி ஏற்பட்ட வனக்காப்பாளர் சங்கிலிப்பாண்டி என்ற கணபதி (57) உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வால்பாறை வனக்காப்பாளர் திருமலைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் கூறியுள்ளதாவது :- 

அக்காமலை பகுதியில் எனது தலைமையில் தர்மராஜ், சங்கிலிப்பாண்டி ஆகியோர் கோனலாறு வேட்டைத் தடுப்பு முகாமிற்கு நேற்று காலை சென்றோம் . ரோந்து பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக காட்டெருமை விரட்டியது. இதில் மூன்று பேரும் சிதறி ஓடினோம். 

பிறகு சங்கிலிபாண்டியை காணவில்லை. அவரை தேடி மீட்டபோது நெஞ்சு வலிப்பதாக கூறினார். நாங்கள் அவரை உடனே வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்'' என கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் குவிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியின் போது உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலருக்கு ரூ.5 லட்சம் வழங்க வலியுறுத்தி வால்பாறை வனச்சரகர் சக்திவேலை நேற்று முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

ஆனால், வனக்காவலர்கள் வனச்சரகர் மற்றும் வனவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு, இறந்தவருக்கு வனத்துறை இழப்பீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் உடலை எடுத்துச் செல்வோம் என வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். 

இதைத்தொடர்ந்து புதனன்று (இன்று) வால்பாறை, மாணாம்பள்ளி, டாப்சிலிப் சரகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் கொடுத்தனர். அதன் பிறகு உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சங்கிலிபாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...