கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும்


கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும் என சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா தெரிவித்துள்ளார்.



கோவை இரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா கூறியதாவது:- 

கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்க பல அடுக்கு நான்கு மற்றும் இரு சக்கர வாகன நிறுத்த வசதிகள் 2 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் மூன்று அல்லது நான்கு மாதத்தில் துவக்கப்படும். கோவை- பெங்களூர் இடையிலான இரவு நேர இரயில் சேவை குறித்து இரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும்.

மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த கோவை- பெங்களூர் இடையேயான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க திட்டப்பட்டுள்ளது. மேலும், போத்தனூர்- பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பிரச்சனையில் தென்னக இரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது. கோவை இரயில் நிலையத்தில் குறுக்கலாக உள்ள முதலாவது நடைமேடை அகலப்படுத்தப்படும். சுரங்க நடைபாதை, லிப்ட், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்'' என ஹரி சங்கர் வெர்மா தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...