நேரு குழுமங்களின் சார்பாக நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் துவக்க விழா


கோவையில் நேரு குழுமங்களின் சார்பாக புதனன்று (இன்று) நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் துவக்க விழா ஏ.டி.டி காலனி பகுதியில் உள்ள கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதனை நேரு குழுமத்தின் செயலாளர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் துவங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்; நேரு மேலாண்மை திறன்மேம்பாட்டு மையம் தற்போது பணிபுரியும் மேலாளர்களுக்கு புத்துணர்வும், அவர்களை புதுப்பித்துக் கொள்ளவும் இம்மையம் உதவும். மேலும் இம்மையம் இளைய தலைமுறைகளுக்கு மேலாளர்கள் திறமைகளை பெருக்கி, துல்லியமாய் தொலைநோக்கு பார்வைகளோடு செயல்பட மேடை அமைத்து தருகிறது. 

இந்த மையம் சரியான மனப்பாங்கையும், எல்லையற்ற நம்பிக்கையும் தான் நிறுவனங்களில் வெற்றிக்கு வழிவகுக்கிறது. இவை இல்லையென்றால், சர்வதேச நிறுவனங்களில் போட்டியிடையில் நிறுவனம் வளர்வதும், தொடர்வதும் கனவாய் போய்விடுகிறது. இதனை உலகளவில் சிறந்த நிறுவனங்களில் நிலைநிறுத்த அவசியமான அடிப்படையில் கவனம் செலுத்துகிறது எனக் கூறினார். 

 

ஒரு நாள் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. அனுதினம் கணக்கு பதிவு

2. நிதி ஒரு தொழில்

3. பயிற்சி மற்றும் மேம்பாடு

4. சமூக வலைதள சந்தையிடல்

5. சந்தை ஆராய்ச்சி

இரு நாள் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. பட்ஜெட் மற்றும் முன்கணிப்புகள்

2. இடர் மேலாண்மை

3. மேலண்ஸ் ஸ்கோர் கார்டு

4. சமூக ஊடக கருவிகளின் திறனறிதல்

ஒரு வாரம் பயிற்சிகள் நடத்தப்படும் தலைப்புகள்:-

1. மேலி அடிப்படை 9.94

2. பணி திறனாய்வு

3. நிறுவன கலந்தாய்வு முறைகள்

4. பைலட் ஆய்வு

புதுமுக மேலாளர் எனத்தொடங்கி அனுபவம் பெற்ற மேலாளர் வரை பயனுரும் வகையில் இந்த பயிற்சிகள் அமைந்துள்ளன.

இந்த விழாவில் பாரதியார் பல்கலைக் கழக முன்னாள் மேலாண்மை துறை இயக்குநர் இரா.வெங்கடபதி, நேரு கல்விக் குழும முதல்வர் எஸ்.பிரான்க்லின் ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...