பரம்பிக்குளம் வாய்க்காலில் தண்ணீர் திருட அமைக்கப்பட்ட குழாய்கள் அகற்றம்- விவசாயி கைது


திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயத்திற்காக 2-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த 4ம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நெகமம், சுல்தான்பேட்டை வழியாக காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு செல்கிறது. இதன் மூலம் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள மூலனூர் பகுதியில் செல்லும் பரப்பிக்குளம் பிரதான வாய்க்கால் பகுதிகளின் ஓரங்களில் பைப் அமைத்து சிலர் தண்ணீர் திருடுவதாக பிஏபி கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்த போது அங்கு வாய்க்கால் ஓரத்தில் கற்களுக்கு இடையே குழாய் அமைத்து திருட்டுத்தனமாக தண்ணீர் திருடப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு குழாய்களை அகற்ற முயன்றபோது கால்வாய் அருகே முறைகேடாக குழாய் பதித்து  தண்ணீர் திருடிய விவசாயி பழனிச்சாமி அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரி சதீசை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். ஆனாலும், பொதுப்பணித் துறையினர் வாய்க்கால்  பகுதியில் முறைகேடாக பதித்த குழாய்களை முழுவதும் அகற்றினார்கள். 

இதைத்தொடர்ந்து, அதிகாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி பழனிச்சாமி மீது பொதுப்பணித் துறையினர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விவசாயி பழனிச்சாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...