விசாரணைக்காக அழைத்துச் சென்ற மகனை காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை தற்கொலைக்கு முயற்சி

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என கோவை வடவள்ளியை சேர்ந்த பூமி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை வடவள்ளி, ராமசாமி தில்லை வீதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பூமி. இவருடைய மகன் சரத் குமார். இவரும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரத் குமாரை வடவள்ளி காவல்துறையினர் விசாரணை என்ற பேரில் அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினர் அழைத்துச் சென்று 7 நாட்கள் ஆகியும் மகனை காணவில்லை எனவும், விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் தன் மகன் எங்கு உள்ளார் என கூற மறுப்பதாகவும் குற்றம்சாட்டி சரத்குமாரின் தந்தை பூமி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதனன்று (இன்று) உடம்பில் மண்ணென்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 



இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பூமியை மீட்டு பந்தய சாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவின் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் மகனை காணவில்லை எனக்கூறி தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...