மனைவி இறந்த வருத்தத்தில் கணவர் தற்கொலை ?



விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (35). கோவையில் பி.என்.புதூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இவரது வீட்டின் கதவு பூட்டியே இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரது வீட்டின் உரிமையாளர் தினேஷ்குமார் வீட்டின் கதவருகே சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தினேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்படவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு சசிகுமார் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சாய்பாபா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சசிகுமாரின் மனைவி உயிரிழந்துவிட்டதால் அவர் மனமுடைந்து  தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...