சரக்கு விமானத்தில் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர முடிவு

புதிய ரூபாய் நோட்டுகளை சரக்கு பெட்டக லாரிகளில் எடுத்து வருவதற்கு காலதாமதமாவதால், சரக்கு விமானத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் நாசிக், மைசூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. சரக்குப் பெட்டக லாரிகளில் வரும் இந்த பணம் ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகத்தில் இறக்கப்பட்டு, அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.

சரக்கு பெட்டக லாரிகளில் ரூபாய் நோட்டு கொண்டு வருவதற்கு ஓரிரு நாள்கள் ஆவதால் பணம் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க சரக்கு விமானங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன் மூலம் சுமார் ஒரு மணி நேரத்தில் பணம் சென்னை வந்து சேர்ந்து விடும்.

இதன்படி, திங்கள்கிழமை முதல் இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- ரிசர்வ் வங்கிக்கு பணம் தேவையான அளவு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் சென்னையில் இயங்கும் 2 ஆயிரம் வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்புவதில்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் எடுத்து வந்தால் தாமதம் இல்லாமல் விரைந்து வங்கிக் கிளைகளுக்கு அனுப்ப முடியும்.

முன்பு தனியார் வாகனங்களிலும் பணம் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் இப்போது அரசு வாகனங்களிலும், வங்கி கிளையில் இருந்து நேரடியாக வந்தும் பணங்களை எடுத்து செல்வதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...