ஏ.டி.எம் மையங்களில் காத்து நின்றோருக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கிய தி.மு.க.வினர்

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. ஆனால், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், பணம் வாங்குவதற்கும் முதியோர் மற்றும் பெண்கள் பல மணி நேரம் காத்து நிற்கின்றனர். நீண்ட நேரம் நிற்பதால் சிலர் மயக்கமடைகின்றனர்.



இந்த நிலையில் கோவை மாவட்ட திமுக இளைஞரனி சார்பில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையங்களில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு குடிநீர், டீ மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டது.



இது குறித்து தி.மு.க இளைஞரனியின் மாநில துணை செயலாளர் பாரி கூறியதாவது:- கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை தி.மு.க. மனதார வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு, மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகளை அரசு இருப்பு வைத்துக்கொண்டு இந்த திட்டத்தை அமுல் படுத்தியிருந்தால், இத்தகைய பிரச்சனைகள் எழுந்திருக்காது. வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் நீண்ட நேரம் நிற்கும் மக்கள் பல இடையூறுகளை சந்திக்கின்றனர்.



இதை தொடர்ந்து, தளபதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் களைத்துப்போய் நிற்கும் மக்களுக்கு குடிநீர், டீ மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை வழங்கினோம். இன்று மட்டும் சுமார் 1500 குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட உள்ளது. தொடர்ந்து திங்கட்கிழமை அன்று ஆர்.எஸ்.புரம் பகுதியிலும் சாய்பாபா காலனி பகுதியிலும் இவற்றை விநியோகிக்க உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் தி.மு.க. உறுப்பினர்களான பிரபுராம், சந்திரசேகர், சிராஜ்தீன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...