சிங்கப்பூரில் போதை மருந்து கடத்திய இருவருக்குத் தூக்கு

சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் இருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் சிஜியோக் ஸ்டீபன் ஒபியோகா, (38). கால்பந்து வீரராக சிங்கப்பூருக்கு வந்த அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 2.7 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிடிபட்டார்.
அதேபோல், மலேசியாவைச் சேர்ந்த தேவேந்திரன் சுப்ரமணியம் (31). கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 2.7 கிலோ போதைப் பொருள் கடத்தியதாக இவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதில், 83.36 கிராம் ஹெராயின் போதை மருந்தாகும்.
சிங்கப்பூர் சட்டப்படி 500 கிராமுக்கு மேல் போதை மருந்து வைத்திருந்து பிடிபடும் நபருக்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2.7 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடைசி வாய்ப்பாக தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க, இருவரும் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களது கருணை மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவருக்கும் வியாழக்கிழமை தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொலை, போதை மருந்து கடத்தலுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...