விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சீன விஞ்ஞானிகள்


பீஜிங்: சீனா விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்தில், ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 2 விஞ்ஞானிகள், ஒரு மாத பயணத்துக்குப் பின் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

நிரந்தர விண்வெளி ஆய்வு மையம்:
சீனா வரும் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக விண்வெளிக்கு சென்று திரும்பும் வகையிலான விண்கலத்தை அனுப்பி வருகிறது. இதற்காக இதுவரை 5 முறை விண்வெளிக்கு விஞ்ஞானிகளை அனுப்பியுள்ளது.

விண்வெளி பயணம்:
ஆறாவது முறையாக கடந்த அக்., 17ம் தேதி 'செனஷோவ் 11' என்ற விண்கலம் மூலம் ஜிங் ஹெய்பிங், 50, ஷென் டங், 38, என்ற இரண்டு விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பியது. இதில் ஜிங் ஹெய்பிங் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு சென்ற அனுபவம் உள்ளவர். ஷென் பிங் முதல்முறையாக சென்றிருந்தார். இவர்கள் விண்வெளிக்கு சென்றவுடன் ஏற்கனவே 2 விஞ்ஞானிகளுடன் அனுப்பப்பட்டிருந்த 'டியாங்காங் 2'விண்கலத்துடன் இணைந்து கொண்டனர்.

பூமி திரும்பினர்:
பின் இருவரும் ஒரு மாதம் அங்கு தங்கியிருந்து திட்டமிடப்பட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். பணி முடிந்து நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சீன வீரர்கள் என்ற பெருமையையும் பெற்றனர். இதற்கு முந்தைய ஐந்து விண்வெளி பயணங்களும் குறுகிய கால ஆய்வுப் பணியாக அமைந்திருந்தன.

2022ல் முடிவடையும்:

பூமியில் இருந்து சுமார் 393 கி.மீ., உயரத்தில் சீனா அமைத்து வரும் விண்வெளி ஆய்வு மையத்தின் மாதிரி 2018ல் முடிவு பெறும். முழுமையான பணி 2022ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...