கோவை புகழ் '20 ரூபாய் டாக்டர்' காலமானார்!


கோவை ஆவாரம்பாளையம் சாலையில் கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம்.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிளினிக் நடத்தி வந்தார். மருத்துவம் பார்க்க தன்னிடம் வரும் ஏழை, எளிய மக்களிடம் கட்டணமாக வெறும் 20 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதால் இவரை ஆவாரம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ”20 ரூபாய் டாக்டர்” என்றே மக்கள் இவரை அழைப்பார்கள். நேற்று காலை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் இவரது கிளினிக்கு மருத்துவம் பார்க்க வந்த ஏழை, எளிய மக்கள் டாக்டர் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கிளினிக் வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலியும் செலுத்தினர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் தனது கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்தினார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்திய நிலையில், ஏராளமான மக்கள் இவரது கிளினிக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

கோவை மாநகரில் சாதாரண ஆலோசனைக்கு கூட 200 ரூபாய் 300 ரூபாய் என மருத்துவர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்த நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காவே வாழ்ந்த மருத்துவர் இறந்து போனது கோவை பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...