கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் கடித்து அவ்வபோது உயிரிழப்பு சம்பவமும் நேரிட்டு வருகிறது. கிராம புறங்களிலும் அதிகமான நாய்கள் திரிகிறது, இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகளும், உள்ளூர் மக்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தெருநாய்கள் பிடித்துக் கொல்லப்பட்டு வருகிறது. தெருநாய்களின் தொல்லை தாங்க முடியாமல் கொல்லப்பட்டு வருகிறது. மறுபுறம் கொலை செய்யப்படுவதற்கு விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது என நீண்டுக்கொண்டு உள்ளது பிரச்சனை.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. கண்காணிப்புக் குழுக்களிடம் நாய்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் தெருநாய்களினால் மாநிலத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு நேரிட்டு உள்ளது.

கந்தன்கோடு மேம்பரம்பாது பகுதியை சேர்ந்த ஹரிதாசன் என்பவரது 15 வயது மகள் கிரிஸ்மா இன்று காலை கடைக்கு பால் வாங்க சென்று உள்ளார். பால் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது தெருநாய்கள் மொத்தமாக நின்று உள்ளன. மொத்தமாக நின்ற தெருநாய்கள் கிரிஸ்மாவை நோக்கி பாய்ந்து உள்ளது. நாய்கள் மொத்தமாக வருவதை பார்த்து மிரண்ட கிரிஸ்மா பயந்து ஓட தொடங்கிவிட்டார். பயந்து ஓடிய கிரிஸ்மா தடுப்பு சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துவிட்டார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டனர். அவருடைய சடலமானது கண்ணம்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...