டொனால்டு டிரம்புடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்து பேசினார். மன்ஹட்டன்  நகரில் உள்ள டிரம்ப் டவரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் 90 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.

இந்த  சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அபே, நம்பிக்கையின் அடிப்படையில் உறவை கட்டமைக்க முடியும் என்று இந்த சந்திப்பு என்னை உறுதியாக நம்ப வைத்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசியதால் பேச்சுவார்த்தை இடம் பெற்ற அம்சங்கள் குறித்து நான் வெளியிட முடியாது. நம்பிக்கை இல்லாமல் கூட்டு ஏற்படாது. அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் நம்பகமான தலைவர் என்று தற்போது நம்பிக்கை உள்ளது. பேச்சுவார்த்தை தெளிவான முறையில் இருந்தது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.இரு தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, அபேவுடன் ஒரு மொழிபெயர்ப்பாளரும் டிரம்புடன் அவரது மகள் இவாங்காவும் உடன் இருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டொனால்டு டிரம்ப் ஜப்பானுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஜப்பான் அணு ஆயுதம் வாங்குவது குறித்து கவலை தெரிவித்த டிரம்ப், அமெரிக்க படைகள் வெளி நாட்டு மண்ணில் இருக்க வேண்டும் என்றால் அதிக தொகை செலுத்த வேண்டும் அல்லது படைகள் வாபஸ் பெற நேரிடலாம் என பேசி இருந்தார்  அதேபோல் அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கூட்டமைப்பான டிரான்ஸ்- பசுபிக் கூட்டுறவு (TPP) க்கு எதிராகவும் பேசி இருந்தார். டிரான்ஸ்-பசுபிக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் அதிபர் ஒபாமாவுடன் ஷின்சே அபே மிகவும் நெருக்கமாக பணியாற்றினார் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...