தீ குளிப்பதாக மிரட்டிய கணவர் எதிர்பாரா விதமாக தீயில் கருகி பலி


கோவை மாவட்டம், ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (36). இவரது மனைவி சென்பகவள்ளி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

பிரபுவிற்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இதனால் கணவர், மனைவி இடையே அவ்வப்போது பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று, பிரபு மது அருந்துவதற்காக சென்பகவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததையடுத்து, வீட்டில் இருந்த மண்ணெண்னையை உடலின் மீது ஊற்றிவிட்டு தீ வைத்து பலியாகப் போவதாக பிரபு மிரட்டியுள்ளார். 

இந்நிலையில், அவரது கையில் இருந்த தீப்பெட்டியை அவர் உரசி மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாரா விதமாக தீ பற்றி அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. அவரது சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு கோவை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...