குடும்ப அட்டை வழங்க அலைக்கழித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி


குடும்ப அட்டை வழங்க அலைக்கழித்ததால் விரக்தி அடைந்த 2 குழந்தைகளின் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை பால் கம்பெனி, தடாகம் பேருந்து நிலையம் அருகே வசித்து வருபவர் மீனா. கணவர் செந்திலால் கைவிடப்பட்ட மீனாவிற்கு 9 வயதில் மவுனிகா மற்றும் 7 வயதில் மிதுன் குமார் ஆகிய குழந்தைகள் உள்ளது. அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். 

இதனிடையே, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை வழங்கக் கோரி மீனா பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. 

இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகள் மவுனிகாவிற்கு சிகிச்சை அளிக்க முடியாமலும், குழந்தைகளுக்கு சாதிசான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற முடியாமலும் மீனா தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வெள்ளியன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது இடது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். 

இதனைக்கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் அவரை அழைத்துச் சென்று முறையிட்டனர். 



இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...