அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளின் தேர்வு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அந்நாட்டின் 45-வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.

தனது தலைமையிலான மந்திரிசபை மற்றும் நாட்டின் முக்கிய துறைகளுக்கான தலைமை அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப், தினந்தோறும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில், அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் ஃபிளின் என்பவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார். டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான மைக்கேல் ஃபிளின், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரசார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.

இந்த பதவியை மைக்கேல் ஃபிளின் ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள், ‘நாட்டுக்கு சேவையாற்ற அமெரிக்காவின் அதிபர் உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும்போது, அதற்கு ஒரே பதில் (எஸ், ஸார்) மட்டுமே உண்டு’ என்று தெரிவித்துள்ளன. 

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...