ரூபாய் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: பூடான் நோட்டுக்களை பயன்படுத்தும் அசாம் எல்லையோர கிராம மக்கள்

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.‘செல்லாது’ என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றவும், கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கிற நிலை, நீடிக்கிறது. அப்படி எடுக்கிற பணத்தையும் பொதுமக்களில் ஒரு தரப்பினர் புழக்கத்தில் விடாமல் பாதுகாக்கும் நிலையும் உள்ளதால், பண தட்டுப்பாடு முடிவுக்கு வராமல் தொடர் கதையாக நீளுகிறது.

நாடு முழுவதும் எந்த பாரபட்சமும் இன்றி மக்கள் திண்டாடி வரும் நிலையில், அசாம் மாநிலத்தின் எல்லையோர கிராம மக்கள் மாற்று வழியை கையாள  ஆரம்பித்துள்ளனர். அசாம் எல்லைப்பகுதியில் உள்ள பூடான் நாட்டு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பூடான் ரூபாய் மதிப்பின் தொகை 25 சதவீதம் அந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது.  எல்லையில் உள்ள டாட்குரி பகுதியில் பூடான் ரூபாய் தாள்களை அங்குள்ள சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் எளிதாக பெற்றுச்செல்கின்றனர்.

டாட்குரி கிராமத்தில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், இங்குள்ள கிராமங்களில் வங்கிகளோ, ஏடி.எம் மையங்களோ கிடையாது. ஏ.டி.எம் மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் 50 கி.மீட்டர் செல்ல வேண்டும். சவாலான சாலைகளில் அங்கு செல்வது கடினமான பணி ஆகும். எஸ்.பி.ஐ யின் நடமாடும் ஏ.டி.எம்  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருகிறது. எனவே இங்குள்ள மக்கள் பூடான் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.  பணம் வழங்குவதற்கு உரிய  நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...