பணம் வராத ஏடிஎம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து மாதர் சங்கம் நூதன போராட்டம்

கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.



மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என திடீரென அறிவித்தது. இதனையடுத்து அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, பெண்கள் மளிகை பொருட்களை வாங்க முடியாமலும், அன்றாட வரவு, செலவுகளை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை மாற்ற குவிந்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பெரும் ஏமாற்றத்தை அனுபவித்து வருகின்றனர்.



மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மாதர் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பணம் வராத ஏடிஎம் மையத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாதர் சங்கத்தினர், பருப்பு வாங்க காசில்லை, பால் வாங்க காசில்லாம மத்திய அரசு செய்து விட்டதே என்று ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்.அமிர்தம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமான மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாதர் சங்கத்தினரின் இந்த நூதனப் போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...