குறிச்சி அரவான் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதைகள் மாற்றம்

கோவை மாவட்டம், போத்தனூர் குறிச்சி பிரிவு அருகில் உள்ள அரவான் கோவிலில் வருகிற 18ம் தேதியன்று (வெள்ளி) திருவிழா நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

1) கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி மார்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் ஆத்துபாலம் வழியாக போத்தனூர் குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி வழியாக இரயில்வே கல்யாண மண்டபம், சாரதா மில் ரோடு, தக்காளி மார்கெட் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2) பொள்ளாச்சியிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் ஈச்சனாரி மஹாலட்சுமி கோவில் சந்திப்பிலிருந்து இடதுபுறம் மதுக்கரை மார்க்கெட் ரோடு சென்று பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுகுணாபுரம் பாலக்காடு சாலை வழியாக ஆத்துபாலம் வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3) பொள்ளாச்சி ரோட்டிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய இலகு மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பொள்ளாச்சி ரோடு எல்ஐசி காலனி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வந்து மாச்சாம்பாளையம் ரோட்டில் இடதுபுறம் திரும்பி ஞானபுரம் பாலக்காடு ரோடு சந்திப்பு வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...