சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த பேருந்துக்கு முறையான ஆவணம் இல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுலா செல்வதற்காக கேரளா சொகுசு பேருந்தை ஏற்பாடு செய்த நிலையில் வரி செலுத்தாதல், உரிய ஆவணங்கள் இல்லை என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீரென அப்பேருந்தை சிறை பிடித்தனர். இதனால், சுற்றுலா செல்ல ஆவலுடன் பேருந்தில் இருந்த மாணவர்கள் இரவு முழுவதும் சாலையில் காத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் உள்ளது கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இன்ப சுற்றுலா பயணம் என சுமார் 80 பேரிடம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். 

சுற்றுலாவிற்காக கேரளாவுக்கு உட்பட்ட பாலக்காட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேருந்தை கல்லூரி நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, புதனன்று இரவு 15 நாட்கள் சுற்றுலா என இரு கேரளா சொகுசு பேருந்துகள் கல்லூரிக்கு வந்ததையடுத்து  காத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் ஏறியுள்ளனர். 

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக வந்த வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேருந்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் இதுவரை முறையான ஆவணங்கள், பர்மிட் பணம் எதுவும் செலுத்தவில்லை என்று பேருந்தை சிறைபிடித்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சுற்றுலா போகிறோம் என்ற கனவில் இருந்த மாணவ மாணவிகள் பேருந்து இல்லை என்ற ஏக்கத்தில் கவலை அடைந்து சோகத்துடனே காணப்பட்டனர். 

தமிழக- கேரளா எல்லையான எட்டிமடை உள்ளிட்ட பல பகுதியில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை கொட்டி வரும் நிலையில் தற்போது முறையான ஆவணங்கள் இன்றி சொகுசு பேருந்துகளையும் இயக்கி வருவது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...