கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் சிக்கல் - மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் எழுபது டன் உருளைக்கிழங்கு தேக்கம்


கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் எழுபது டன் உருளைக்கிழங்கு விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக் கிழங்குகள் அங்குள்ள விவசாயிகளால் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டுவரப்படும். தினசரி இப்படி டன் கணக்கில் கொண்டு வரப்படும் இந்த உருளைக் கிழங்குகள் பின்னர் இடைத்தரகர்கள் யாருமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் மொத்த வியாபாரிகளிடம் நேரிடையாக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.

இந்நிலையில் நேற்று முதல் கூட்டுறவு சங்கத்தில் இனி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டவுடன் உருளைக்கிழங்கு விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களின் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கை வாங்க எந்த மொத்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் விவசாயிகள் கொண்டுவந்த உருளைக்கிழங்குகள் விற்பனையின்றி தேங்கிவிட்டன. 



இன்று ஒரு நாளில் மட்டும் எழுபது டன் வரை உருளைக்கிழங்கு தேங்கியுள்ளதாகவும், இவை தேங்கினால் அழுகிவிடும் என்பதால் தாங்கள் கடும் இழப்பிற்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், அத்தியாவசிய மற்றும் அழுகும் பொருட்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு தேவை என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...