தனியார் மருத்துவமனையில் 3 வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தனர்

கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடிக் கதவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அவர் தனது மூன்றரை வயது பெண் குழந்தையான தீபஸ்ரீ-க்கு உடல் நிலை குறைவு காரணமாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சைல்ட் டிரஸ்ட் எனும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

செவ்வாயன்று குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு நிமோனியா நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் புதனன்று (இன்று) பிற்பகல் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை சிவகுமார் திடீரென மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கதவு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை அனுமதித்தது  முதல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறி அலைகழித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...