காபூலில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நடந்த தற்கொலைப்படையினர் நடத்திய மோட்டார் வாகன குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் புலி மெஹ்மூத் கான் பகுதியில் உள்ள ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் வளாகத்தில் நடந்ததாக ஆப்கன் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குண்டூஸ் மாகாணத்தின் மஸார்-இ-ஷெரீஃப் நகரில் உள்ள ஜெர்மன் தூதரகம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய சரக்கு வாகனத்தை மோதச் செய்து தலிபான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...