'எக்சிட் தேர்வு' வேண்டாம் என்று கூறி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு எக்சிட் தேர்வு வைக்க இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு முறையை எதிர்த்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து அக்கல்லூரியின் மாணவர் பிரதிநிதியான விட்மன் அறிவுமதி கூறியதாவது :- 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளை எழுதியே நாங்கள் இந்த படிப்பை படித்து வருகிறோம். ஆனால் தற்போது எக்சிட் தேர்வு முறை வைக்க இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறையும். வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையேயும் நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வை, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே நடத்துவது ஏற்புடையதல்ல. உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 



          

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...