ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடையினால், மக்கள் அவதி -ஜி.கே வாசன்

அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறையை தளர்த்த வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30 ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டுமெனவும், அப்படி செய்தால் மட்டுமே வணிகர்களும், சிறு தொழில் முனைவோர்களும் தங்களது வாழ்வதாரத்தை காப்பற்றி கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார். 

மேலும், ரயில் நிலையம், விமான நிலையம், தனியார் மருத்துவமனை, மருந்து கடை உள்ளிட்டவற்றில் அரசு உத்தரவுப்படி 500, 1000 ரூபாய் தாள்களை பெற்று கொள்ள வேண்டுமெனவும், அதனை பின்பற்றாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வெறும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வைத்து சாதரண மக்கள் வாழ முடியாது எனவும், 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு பதிலாக 500 தாள்களை அச்சிட்டு வெளியிட்டு இருந்தால் சாதரண மக்கள் பயன்பெற்று இருப்பார்கள் எனவும் ஜி.கே.வாசன் கூறினார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று ஆட்சி பணிக்கு திரும்ப பெற வேண்டுமென்பதே தமது விருப்பமென அவர் தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...