தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  சுங்கக் கட்டணம் ரத்தை நீட்டித்து சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சுங்கக் கட்டணம் ரத்து இன்று இரவுடன்  முடிவடையும் நிலையில், சுங்க கட்டணம் ரத்து மேலும் 4 நாட்கள் நீட்டிக்கபடுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரன்சிகள் தட்டுப்பாடு காரணமாக வரும் 18ம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. கால  அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான கடைகளில் பழைய நோட்டுக்களை வாங்காததால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை சந்தித்தனர். இதேபோல் தேசிய   நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு   ஊழியர்கள் மறுத்தனர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, நவ.14ம் தேதி வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்   கட்கரி ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தால் இந்த சலுகை 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் 4நாட்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...