தலைமறைவான கேரளா பெண் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக திருச்சூரை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி குரியா பிள்ளை மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையறிந்த அந்த பெண் ஷார்ஜா சென்று தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் குரியா பிள்ளை ஷார்ஜாவில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வருவதாக கேரள மாநில குற்ற பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து அவர்கள், கோவை விமான நிலைய குடியுரிமை பிரிவு போலீசாரிடம் இது குறித்து தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். அதன்படி இன்று கோவை வந்த குரியா பிள்ளையிடம் கோவை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் கோவை வந்து அந்த பெண்ணை கைது செய்து கேரள மாநிலத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...