நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை- பழனி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை தண்டனை வழங்கி பழனி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மருதசாமி (65). இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனி துணை வட்டாட்சியராக இருந்த பாஸ்கரன் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அப்போது பாஸ்கரன் சொந்த வீடு கட்டி வருவதாகவும், பணம் பற்றாக்குறையாக இருப்பதால் ரூ. 3 லட்சம் கடனாக தரும் படியும் மருதசாமியிடம் தெரிவித்து கடன் வாங்கியுள்ளார். கடன் தொகைக்கு வங்கிக் காசோலையை ஈடாக தந்துள்ளார். பின் வீடு கட்டி வீட்டை காலி செய்த பின்பும் கடனை திருப்பித் தரவில்லை. இதையடுத்து, காசோலையை வங்கியில் வழங்கிய போது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.

இதனால் மருதசாமி, பழனி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன், பாஸ்கரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். பாஸ்கரன் தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உதவி ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...